Saturday, January 16, 2010

வண்ணமும் வாசனையும்


11-1-2010
காலை 5 மணி 48 நிமிடங்கள்

நான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்தேன். அந்த காலை வேலையிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.
நான் நடமாட்டம் குறைவாக உள்ள இடம் தேடி அமர்ந்தேன்.
என் கையேட்டை திறந்து நான் அப்போதைக்கு முடித்திரிந்த என்னுடைய பயணத்தை பற்றி ஏதாவது எழுதாலம் என்று நினைத்து அம்ர்ந்திருந்தேன். இன்னும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் நான் வீட்டிற்க்கு செல்வத்ற்காண பேருந்து நிலையத்திற்கு வந்துவிடும். நான் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும்.

அதற்குள் ஏதாவுது எழுத வேண்டும் என்று நினைத்து நான் சென்று வந்த பெங்களூரூ பற்றி எழுத தலைப்பட்டேன்.

சிந்தித்து கொண்டிருக்கையில், ஒரு ஆணும் , பெண்ணும் என்னை கடந்து சென்றனர், அவர்கள் தம்பதியாக இருக்ககூடும். கடந்து போகையில் ஒரு இடத்தில் கழிவு நீர் தேங்கியிருந்தது. அந்த ஆண் கழிவு நீர் பாதையில் போகாமல், வேறு பாதையில் சிறிதாக துள்ளி கடந்து சென்றார். அந்த பெண்ணோ கழிவு நீர் தேங்கியிருந்த பாதையில் நடக்க முற்படுகையில், இரு முறை வாந்தி எடுப்பது போல் குமட்டினாள், அந்த கழிவு நீரின் "மணம்" சுவாசிக்க முடியாமல்.

"அட , இதில் என்ன இருக்கு ?"ன்னு கேட்கலாம்.

அந்த இடத்திற்க்கு பக்கத்திலேயே நாலு பேர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த "மணம்" குமட்டலைத்தரவில்லையா?

ஓ !!! பழக பழக கழிவு நீரின் "மணம்" கூட புடிச்சுபோயிரும் போல.

சிறிது நேரம் கழிந்த பின்
மணிபால் மாநிலத்தில இருந்து இருபதுக்கும் அதிகமான பேர் இளைஞர்கள், இளைஞிகள் சுற்றுலா வந்தாங்க. அவங்களும் அங்கேயே அமர்ந்தாங்க.
அவங்க என்ன பண்ணாங்க
காதுல போட்டுருந்த muffler-a மூக்குக்கு போட்டுட்டாங்க.

இவ்வாறு அங்கே ஒவ்வொன்றாக நடக்க அடுத்த ஒருவர் வந்தார்.

ஒரு பெரிய தகரத்தை கொண்டுவந்தார். கையில் சாயங்க்ள் பல வைத்த்ரிந்தார். அவரை பார்த்தவுடன் கடைக்ளில் பெயர் பலகைகளில் வண்ணம் தீட்டுபவர் என்று நினைத்தேன். நான் நினைத்தது சரிதான், அவர் தன்னுடைய சாயங்களை சரியான விகிதங்களில் கலந்து கொண்டிருந்தார்.
அவருடைய வண்ணங்களால் அந்த தகரம் பதாகை ஆகும் என்று எண்ணி அவர் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்பில் அமர்ந்திருந்தேன்.


அந்த ஓவியர் ஒரு கயிலி,ஒரு டீ சட்டை அணிந்திருந்தார். கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்.

தன்னுடைய தகரத்தை தன் வண்ணங்களால் பெயர் பதாகையாக மாற்றிக் கொண்டு இருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் வேலையில் ஒரு புத்திசாலித்தனம் இருப்பதாக நான் உணர்ந்தேன்.
" டேய் ! அதில என்ன புத்திசாலித்தனம் கண்ட " என்று கேட்கலாம்.
இருந்துச்சு. paint-ன்,நேரத்தின் அளவை கணக்கிட்டு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தார்.

பதாகையில் எங்கும் பிழையில்லை என்று சொல்லலாம் அவ்வளவு அழகாக தீட்டியதாக எனக்கு தோண்றியது.

இதையெல்லாம்விட அந்த ஓவியர்தான் வரைந்த நேரத்தில் ஒரு தடவை கூட கழிவு நீரின் 'மண'த்தால் முகம் சுழிக்கவில்லை, தன் மூக்கை கூட மூடவில்லை.
இந்த விடயத்தை நான் உணர்ந்தது அவர் தன் வேலை முடித்துவிட்டு ஓவியம் காய காத்திருக்கும் போது தான்.
அந்த ஓவியர் ரசித்து வேலை செய்ததால் தன்னை சுற்றி இருந்த அத்தனையையும் கவனிக்க தவறினார்.
மணிபாலில் இருந்து வந்த பயணிகளையோ, கழிவு நீரின் மணமோ, அவரை வெகு நேரமாக கவனித்து கொண்டிருந்த நானோ , அவரது கவனத்தை கவர தவறிவிட்டோம்.


காரணம் யொசித்து பார்த்தேன், வண்ணங்கள் அந்த ஓவியரின் மனதில் எல்லா வகையான உணர்ச்சிகளான இன்பம், துன்பம், கோபம்,அமைதி, அறுவறுப்பு அனைத்தையும் சமமாக வைத்துக் கொள்ளும் போல.
கண் பசியோடு உணவு உண்ணும் போது, காதோ, மூக்கோ, நாக்கோ எதையும் உண்ண மறுக்கிறது போலும்.

ஓவியம் வரைவதையே தன் வாழ்க்கையாக கொண்டவர்கள் வாழ்வில் வறுமை இருக்கலாம் ஆனால்
ஆழ்மனதில் ஓர் அமைதியும், இன்பமும் இருக்கவே செய்கிறது.

இது வண்ணங்களின் சக்தியா ? இல்லை மாயையா?

ஓவியரின் ஓவியம் மட்டும் அல்ல , அந்த ஓவியர்கள் கூட வண்ணமயமாகத் தெரிகிறார்கள்.
அதனாலோ என்னமோ அந்த கழிவு நீரின் 'மணம்' எனக்கும் தெரியவில்லை அவ்வளவு நேரமாக அங்கேயே நான் அமர்ந்திருந்தும்.

4 கருத்துக்கள்:

Pradeep said...

நல்ல சிந்தனைகள் மற்றும் நல்ல எழுத்துகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

Prabhu said...

’கயிலி’ஐ கைலின்னு எழுதியிருக்கலாமோ?

நன்றாய் எழுதிருக்க!

எவனோ ஒருவன் said...

Pradeep
அவர்களுக்கு வாழ்த்துக்களுக்கு நன்றி

எவனோ ஒருவன் said...

pappu
வாழ்த்துகளுக்கு நன்றி
தவறை இனி மாற்றிக் கொள்கிறேன்