Tuesday, March 22, 2011

இது இவனின் அச்சத்தின் மிச்சமோ ?



"பயம் "
"எனக்குள் எப்பொழுதும் பயம் இருக்கும்  
அல்ல அல்ல பயம் இருந்துகொண்டே இருந்தது.
சிறிய அடைக்கப்பட்ட அறையிலோ அல்லது லிஃப்டிலோ அல்ல வாகனத்திலோ செல்லும் போது மூச்சு திணறுகிறது என்ற பயத்தில் இருப்பேன்.
காலை 6 மணி ...ஒரு முறை சிறிய வாகனம் ஆனால் வசதியான வாகனம் அதில் சென்று கொண்டிருந்தேன்.ஜன்னல்கள் எல்லாம் மூடிய நிலையில் கர்டைன்கள் ஒளியை உள்ள வர விடாமல் தடுத்துக்கொண்டுருந்தன.
மிகவும் தவித்த நிலையில் பொறியில் சிக்கிய எலியைப் போல் இருந்தேன். அமைதியில்லாமல் ஒரு விதமான படபடப்பு என்னுள்.
சூரியன் உதிப்பதை பார்க்க சிலர் ஜன்னலை திறக்க ஒளி உள்ளே வர தொடங்கியது.சிறிது ஆசுவாசப்பட்டேன்.
அப்போது புரிந்தது. இந்த பிரச்சினையில் எனக்கு வழி தெரிந்தது, சிறிய அடைக்கப்பட்ட இடத்தில் இருக்க நேரிட்டால் அங்கே அழுத்தங்களை வெளியே கொட்ட சின்ன ஜன்னல் இருந்தால் போதும் என்று...
பயணம் தொடர்ந்தது.


செல்லும் வழியில் ஒரு கனரகப் பேருந்து கவிழ்ந்து கிடந்ததை பார்த்தேன். மறுபடியும் பயம் என்னை தொற்றிக் கொள்ள, நான் சென்ற வாகனத்தை சந்தேகிக்க ஆரம்பித்தேன். மறுபடியும் சஞ்சலம். 


ஒரு புள்ளியல் விவரம் சொல்வது என்னவென்றால் ஒரு வருடத்திற்கு பாம்பு கடித்து இறந்து போவோரின் எண்ணிக்கையைவிட வாகன விபத்தில் இறந்து போவோரின் எண்ணிக்கை அதிகம் என்று. பாம்பை மிரள்வோர் அதிகம் ஆனால் உந்துவண்டி ஓட்டத் தெரியாத, செல்லாதவர் மிகச் சிலரே. 
இதற்காக என்ன உந்துவண்டியை தடைசெய்துவிட போகிறார்களா என்ன?. அப்படி செய்தால் அது புத்திசாலித்தனமா என்ன? 
இந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க பாம்பை பற்றிய பயம் எனக்குள் தோன்றியது. 
பக்கத்தில் இருந்தவரிடம் அரசு மருத்துவமனை அருகில் எங்கு இருக்கிறது என்று கேட்டேன். ஏனென்றால் அங்கே தான் பாம்புகடிக்கான மருத்துவம் சரியாக பார்ப்பார்கள்.
அவர் தெரியாது தலையசைத்து, "ஏன்" என்று கேட்டார். சிரித்துக் கொண்டு ஒன்றுமில்லை என்பது போல் சமிஞைச் செய்தேன்.
எங்கோ படித்த ஞாபகம் உப்புச் சத்து உடம்பில் இல்லையென்றால் பாம்பு விஷத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. 


என் உடம்பில் எவ்வளவு உப்பு இருக்கிறது , எவ்வளவு சர்க்கரை இருக்கிறது யோசித்துக் கோண்டே வந்தேன்.
என் உடம்பு கூற்றை பற்றி யோசிக்க ஆரம்பிக்கையில் உப்பு, சர்க்கரை இதைப் பற்றி எல்லாம் மனம் சிந்திக்க அன்று எனக்கு அடிக்கடி சிறுநீர் வர ஒரு பயம் எங்கே சர்க்கரை நோய் இருக்குமோ என்று?
சிறு நீரை அடக்க ஆரம்பித்தேன், அது தான் வழி என்று யோசித்துக் கொண்டு..
மற்று மொரு மனம் அதிகமாக சிறுநீரை அடக்கினால் சிறுநீரகக் கல் உருவாகுமோ என்று எண்ண ..அன்று நான் பயணித்த வண்டி ஏ சி வசதி உள்ள வண்டி என்று யாரோ சொல்ல சில நேரம் நிம்மதி
 .
பயணம் முடிந்தபின் ஒரு அரங்கத்தில் விழாவில் பங்கேற்க வேண்டும். ஓரே கூட்டம் அடைக்கப்பட்ட அரங்கத்திலும் மூச்சுமுட்டுவது போல உணர்ந்தேன்.எவ்வளவு வேகத்தில் வெளியே வர வேண்டுமோ அவ்வளவு வேகத்தில் வெளியே வந்தேன்.


 



இப்படி ஒன்று மற்றொன்றுக்கு ஆரம்பமாக மாற, அது ஏதோ வகையில் ஏதோ ஒன்றுக்கு முடிவாக , பயம் என்னோடு பயணித்துக் கொண்டே வந்தது.
நான் ஒரு விஷயத்தை எண்ணி பயம் கொள்கிறேன் என்கிற எண்ணம் தோன்றிவிட்டால் எனக்கு அது பயம் தராது.
நம் வாழ்வின் தேவைகளுக்கும், அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கும் பயம் காரணமாகவும் அதே சமயம் அதற்கு தடையாகவும் அதே பயம்தான் காரணம் இருக்கிறது.
இப்படி சாதாரணமான நாளில் , என்னுள் இத்தனை பயம் எனக்கு வாழ்க்கையில் வரஇருக்கும் முக்கியமான தருணங்களில் ஏற்படும் குழப்பம், பயம் என்னை எந்த நிலைக்கு கொண்டு செல்லும்.


ஆனால் ஒரு நம்பிக்கை 


இத்தனை பயம் என்னிடம் படையெடுக்க நான் ஒவ்வொருமுறையும் அதனுடன் போராடுவது தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது தவிர ஒவ்வொரு முறையும் நான் ஒன்றுடன் வெற்றி பெற்று தான் அடுத்த பயத்துடன் போராடவே செல்கிறேன் என்பதை பல சமயங்களில் மறந்து விடுவதால் நான் பயந்தவன் ஆகிறேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன். நான் பயங்கொள்பவன் என்று சொல்வதில் நான் கூச்சப்படுவதில்லை. பயங்கொண்டுருப்பவன் என்று சொல்வதை விட பயங்களைக்கொண்டு இருந்தவன் என்று சொல்ல நினைப்பவன்.

சில சமயங்களில் நான் அச்சமில்லாமல் அலட்டிகொள்பவர்கள் செய்ய மறுக்கவோ அல்ல
செய்ய பயப்படும் செயல்களை நான் என் பயமின்றி  செய்துகொண்டிருந்தேன். பயம் என் மன உறுதி வென்ரிருப்பின் நான் அதனை செய்து முடித்திருக்க முடியாது. 

இதனை உணர ஆரம்பிக்கும் வேலையில் பெரும்பான்மையினரிடம் வேறுபட்டு இருந்திருந்த காலங்களை மறந்ததினலோ என்னவோ என்னை நான் பயந்தவனாகவே அடையாளப்படுத்திக் கொண்டேன். 
பயம் சில நேரங்களில் எனக்கு சவால்களை உருவாக்குகிறது. பயம் இப்பொழுது வேறு பேராக எனக்கு பரிச்சயப் படுகிறது. கவனம், புத்திக்கூர்மை, அலட்சியமிண்மை இப்படியோ எத்தனையோ வார்த்தைகளில் சொல்லலாம்.

இந்த எண்ணம் தோண்றியபின் எந்த விதமான பயத்திலும் நான் வெகுநாள் உழன்றுகொண்டுருப்பதில்லை. அதற்காக நான் தைரியசாலியாக மாறிவிட்டேன் என்று சொல்ல வில்லை. இந்த பயத்திற்கு வேறு பெயர்கள் வைக்க கற்றுக் கொண்டதனால் அதனால் ஏனோ மனம் பதைபதில்லை".

இவ்வாறு அவன் பயத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதி முடிக்க, டக் டக் என்று சத்தம் கேட்க தன் அப்பாவோ என்று ஒலித்து வைத்தான்.
அவனது அப்பாவுக்கு இந்த எழுத்தாளர்களையும் பிடிக்காது, எழுத்தும் பிடிக்காது. இவன் இப்படி எழுதுவது அவருக்கு தெரிந்தால் தன்னை 'தொலைச்சு கட்டிடுவார்'ன்னு வேகமாக செயல்பட்டான். 

எல்லாம் ஒளித்துவைத்தபின், வாசலை பார்த்து இருக்கையில், இவன்  சகோதரன்  வர, அதுவரை தான் எழுதிய எந்த ஒரு பயமும் தனக்கு இல்லை என்று மெத்தனசெரிக்கில் இருந்திருக்க தனக்கு இருக்கும் ஒரே பயம் தன் தந்தையிடம் தான் என்று உணர , அவ்வளவு நேரம் அவ்வளவு தடவை எழுதிய பயம், அச்சம் என்ற சொற்களுக்கு ஊசி குற்றியது போல ஒரு பொருள் விளங்கியது.
வந்த  சகோதரன்  என்னடா ஒரு மாதிரி இருக்க என்று விசாரிக்க , 
"ஒண்ணுமில்லை டா"ன்னு அசடு வழிந்தான்.





Thursday, February 17, 2011

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு

புத்தகம்.....


புத்தகம் என்பது ஏதோ ஒரு பொருளை கையாளும், அது புத்தகத்தின் இறுதிவரை விவாதிக்கப்படும்.
வார இதழ், மாத இதழ் போன்றவை இதற்குள் வராது.
இப்படிப்பட்ட புத்தகம் எழுதுவதுற்கு பெரும் அறிவும், அனுபவமும் தேவை என்ற சிந்தனை எனக்குள் பல நாட்களாக தோண்றியது...
ஒரு எழுத்தாளன் தன் கருத்தை எழுத்துக்களால், சொற்களால் பதிவு செய்கிறான்.


ரொம்ப நாளாக நான் எழுத்தாளர்கள் மேல் ஒரு வகையான மரியாதை என்பதை தாண்டி ஈர்ப்பு கொண்டிருக்கிறேன் என்று கூட சொல்லலாம்.


எழுத்தாளர்களின் எழுத்துக்களை விட அவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்களது வாழ்க்கை எத்தகையானதாக இருந்திருப்பின் அவர்களிடம் இருந்து இத்தகைய எழுத்துக்கள் வந்திருக்க கூடும் என்று எண்ணிக் கொண்டிருப்பேன். நான் அவர்களது வாழ்க்கையைப் பற்றியே நிறைய அறிய நினைத்தேன்.


இன்னும் சொல்லப் போனால் சாதாரண வாழ்க்கை மேற்கொள்ளும் ஒருவன் எப்பொழுது எழுத ஆரம்பிக்கிறான் ?
 ஆராத் துயரிலா ?     உச்சக் கட்ட இன்பத்திலா ?
நஷ்டத்திலா ?    லாபத்திலா ?
நிறைய கற்றபின்பா ?
அல்ல இவை எல்லா மாறி மாறி வாழ்க்கையில் பார்த்த பின் இனி வாழ்வில் சாதிக்கவோ , இழக்கவோ ஒன்றுமில்லை என்ற நிலையிலா?


இந்த உலகம் என்னும் பெரிய நிலப்பரப்பில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்கு உரிமைக்கும் சிவப்பு  சாயத்தில் எழுதுவரொ ?
 
இதில் ஏதோ ஒரு நிலை என்றாலும் அதற்கும் நிச்சயம் ஒரு விதிவிளக்கு இருப்பார்.


சில நேரங்களில் ,வாழ்வின் சந்தோஷம் துக்கம் எண்ணங்கள் பேச்சு போன்றவற்றை எழுத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்களோ என்று கூட சிந்திக்க தோண்றும்.
எழுத்தாளர்கள். ஒரு பொருளை யாரும் அணுகாத வண்ணம் ,சில நேரங்களில் புதியதாக இல்லாமல் போனாலும், ஆனால் அவர்களுக்கே உரியே தனித்துவமான கோணத்தில் அணுகுவார்கள்.


 நான் படித்த புத்தகங்களை விட நான் படிக்காமல் பாதியில் விட்ட புத்தகங்கள் அதிகம் ம்ம்ம்ம் மிக மிக அதிகம். பல எழுத்தாளர்களின் பெயர்கள் ஞாபகம் இருக்கும் அளவுக்கு அவர்கள் புத்தகம் ஞாபகம் இருப்பதில்லை. வெட்கப் படுகிறேன். நான் வேகமாக படிக்கும் பழக்கம் கொண்டவன் அல்ல அது கதை புத்தகங்களாகவே இருந்தாலும். நான் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவுடன் எழுத்தாளர் சொல்லவரும் கருத்தை சரியா என்று சில நாள் யோசிப்பேன்.அது வரை வாசிக்க மாட்டேன் அதன் பின் அந்த புத்தகம் என்னை படிக்க தூண்டும்,
 சில நேரங்களில் சில நல்ல புத்தகங்கள்
அந்த இடைவெளியில் என் கையை விட்டு சென்றுவிடும். பின் தேடுவேன்.


தவறு என் மேல் தானே தவிர அந்த எழுத்தாளர்கள் மேல் அல்ல.


இன்னொரு அல்பமான காரணம் என்னவென்றால் எனக்கு என்றாவது ஒரு நான் எழுத்தாளன் ஆவேன் என்றும் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை படிப்பதினால் ஏதோ வகையில் ஏதோ ஒரு எழுத்தாளர் தன் எண்ணங்களினாலோ சொற்களினாலோ என்னிடம் பாதிப்பு ஏற்படுத்திவிடுவாரோ என்ற பிரம்மை, பயம், குழப்பம் என்று கூட சொல்லலாம்.


அதெல்லாம் உண்மை இல்லை என்று இங்கு எழுத்தாளர்களாக இருக்கும் மறுக்கலாம்.


இந்த வகையான எண்ணம் வரக் காரணம் அந்த எழுத்தாளர் பெயர் சொல்ல விரும்பவில்லை.
மேற்கத்திய எழுத்தாளர் அவர் எழுதிய இரண்டு புத்தகங்களை படித்தேன்.
இரண்டுமே எனக்கு ஒரே வகையான எண்ணங்களைத் தந்தது. இதனால் நான் புரிந்து கொண்டது ஒரு விஷயம் நமக்கு பிடித்துவிட்டாலோ நம்மை பாதித்துவிட்டாலோ, நம்மை அறிந்தோ அறியாமலோ நம் எழுத்துக்களில் அந்த சிந்தனைகள், எண்ணங்கள் வந்து தொற்றிக் கொள்ளும்.


எழுத்தாளார்களின் வலிமை காலத்தை கடந்து நிற்கும். உதாரணம் பல.
திருவள்ளுவர் முதல் நாளை எழுதத் தொடங்கும் அடுத்த எழுத்தாளன் வரை. எழுத்துக்கள் என்ன புரட்சியா செய்து விட முடியும் ?
பாப்லோ நெருடாவின் வரிகளை பாடிக்கொண்டே மக்கள் சிலியின் கொடுங்கோல் ஆட்சியை தூக்கி எறியவில்லை ?.  காதலையும் வீரமும் சொன்ன எத்தனை எழுத்தாளர்கள் எல்லா மொழிகளிலும்.
இவர்கள் எல்லா எழுத்தாளர்களும் சமூக மேம்பாட்டுக்காகத்தான் எழுதியிருக்க வேண்டும். இவர்களுக்கு ஒரு வீரம் இருக்கும் , செருக்கு இருக்கும். இவை இருப்பதால்தான் என்னவோ எழுத்துக்கள் ஆரோக்கியமாகப் பிறக்கின்றன.


பலருக்கு சிலரை பார்த்து "இவரெல்லாம் ஏன் எழுத வரனும் அப்படின்னு தோணும் ?".
சரியான வாசகர்களாலேயே நல்ல எழுத்தாளன் உருவாகிறான், ஆனால் ஒரு விஷயத்தை மறந்திவிடக் கூடாது வாசகர்களுக்குக்காக தான் எழுத்தாளன், எழுத்தாளனுக்காக வாசகனில்லை....
சத்தமில்லாமல் ஜன்னலோரம் உக்கார்ந்து புத்தகம் எழுதிவிட்டு, பிரதிகளை விற்று காசாக்கும் நோக்கோடு எழுதப்படும் எந்தவொரும் எழுத்தும் விடிகாலையில் காணாமல் போகும் மேகம் போல் காணாமல் போகும்.


வகைப்படுத்திகிறான் இவன் "அவன்" தான் நினைக்க வேண்டாம் , கம்யூனிஸ்ட் தோழர்களின் எழுத்துக்கள் என்றுமே சமூக நலன் சார்ந்த பார்வையாக இருக்கும்.
இவர்களின் எழுத்துக்கள் எளிதாக இருக்கும் ஆனால் சமூக அவலங்களை எதிர்ப்பதிலும் , மக்கள் நலம் காப்பதிலும் இவர்களின் எழுத்துக்கள் மிகவும் வலிமையுடையனவாக இருக்கும். இவர்களின் எழுத்துக்களில் வக்கிரம் இருக்காது. வரலாறுகளில் இருந்து நிறைய மேற்கோள்கள் இருக்கும்.
தோழர்கள், அவர்கள் எழுதும் எழுத்துக்கு ஏற்ப களத்தில் இறங்குவார்கள், போராடுவார்கள். அவர்களுக்கு ஏனோ சரியான மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. அவர்களது போராட்டமும் வெளவெளத்து போய்விடுகிறது.
இவன் கம்யூனிஸ்ட் தான் என்று நினைப்பவர்களுக்கு:- நான் இதுவரை ஒரு தோழரின் புத்தகம் கூட படித்ததில்லை, ஆனால் அவர்களின் கட்டுரைகள் படித்து இருக்கிறேன்.
நான் கம்யுனிஸ்ட் என்று சொல்வதில் வெட்கப்படவில்லை ஆனால் அப்படி நினைத்தால் அவர்களைப் போல் களத்தில் நான் எல்லா சமயங்களிலும் இறங்கிப்போராடியதில்லை.


பெண் எழுத்தாளர்களின் ஆதிக்கம் இலக்கியத்திற்கு அவசியம். சங்க இலக்கியத்துலேயே பெண் புலவர்கள் இருந்தாங்க. ஔவையார்ல ஆரம்பிச்சு இன்னைக்கு இருக்கிற அத்தனை பெண் எழுத்தாளர்களும்.
அருந்த்ததி ராய் எழுத்தாளர் என்பதை தாண்டி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறார், ஆனால் அவர்கள் ஆயுதம் ஏந்துதல் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயுத இல்லாமல் இந்த நாட்டிற்கே சுதந்திரம் வாங்கினோம். எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் எழுத்தாளனுக்கு சமுதாயத்தின் கட்டமைப்புக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.


குழந்தை எழுத்தாளர்கள் ரொம்ப முக்கியமான பங்கு வகிக்கிறாங்க. சின்ன வயசில நிறைய நீதி நெறி கதைகள் படிப்பேன். அந்த கதைகள் எனக்கு யோசிக்க கத்துகொடுத்தது,
ஆனால் அப்ப எனக்கு தோணல, இப்ப மலைக்கிறேன். அந்த கதைகள் எழுதினவர்களுக்கு வயது எப்படியும் மிக அதிகம் இருக்கும் ஆனால் குழந்தைகளின் மனம் போல் எப்படி எழுதினார்கள்...?

சில எழுத்தாளர்கள் குறித்து நான் அறிந்த சில சுவையான செய்திகள் என்னவென்றால் கதையில் கதாபாத்திரங்கள் சந்தித்தித்துக் கொள்ளும் இடங்களாக அவர்கள் நினைத்து கொள்ளும் இடங்களுக்கு அவர்களே சென்று அந்த இடங்களில் அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்றும் அதை பொறுத்து தன் கதை மாந்தர்களின் செயலும் வசனும் இருக்கும்படி செய்வார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.


நம் தமிழ் நாட்டில் எழுத்தாளர்களை பற்றியோ அல்லது சில எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறை வெள்ளித்திரையில் பதிவு செய்யாது இருப்பது வருந்ததக்க விசயமே. மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகளும், பலரின் வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தகம் படிக்கும் இயல்பு இல்லாதவர் கூட ஏதோ ஒரு வகையில் அந்த திரைப்படங்களினால் எழுத்தாளனின் எண்ணங்களினால் ஈர்க்கவோ பாதிக்கவோ படலாம்.


யார்கிட்டயாவது உங்களுடைய பொழுது போக்கு என்னன்னு கேட்டா ? அதிகம் சொல்லறது "புத்தகம் படித்தல்". அது எவ்வளவு உண்மை உங்ககிட்டையே விட்டுறேன்.
மறுபடியும் எந்த புத்தகம் உங்களுக்கு பிடிச்ச புத்தகம் கேட்டா மேற்கத்திய எழுத்தாளர்களின் புத்தகங்கள்தான் சொல்வாங்க. நம்மில் எத்தனை தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறர்கள் என்று கூட தெரியாமல் போய்விட்டது. முக்கியமாக எனக்கு.





உங்க எல்லார்கிட்டையும் ஒரு வேண்டுகோள் நீங்க படிச்சதிலேயே மிகச் சிறந்த புத்தகமாக எதக் கருதிரீங்க ?  எழுத்தாளர் பெயர் ? ஏன் ? 




எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை.


என்னைப் போல் கத்துக்குட்டி வாசகனுக்கு பரிந்துரைக்கின்ற தமிழ் எழுத்தாளர்களை பட்டியலிட்டால் மிக்க நலம் .
{
 பிரபலமானவர்களை தவிர மற்ற ஆசிரியர்களை பட்டியலிட    
விரும்பிகிறேன் 
}
  


நன்றி

Tuesday, January 11, 2011

திருமணம் ஆகாமல்

அது அழகிய சனிக்கிழமை மாலை நேரம். அந்த ஊரில் அது மிகவும் பிரபலமான விளையாட்டு
திடல் என்று சொல்லலாம்.சிறுவர், சிறிமியர், இளைஞர்,இளைஞிகள், வயதானோர்
என அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
வார நாட்களில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏனோ இந்த மகிழ்ச்சி இரட்டிப்பாக
தொற்றிக் கொள்கிறது.
எல்லாரும் கடந்த வாரக் கவலைகளையும், வரும் வாரத்தில் வரவிருக்கும்
பிரச்சனைகளை மறந்தும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் காவல் துறையில் சேருவதர்க்காக பயிற்சி எடுத்துக் கொண்டு சிலர்,
மாநில, தேசிய அளவில் விளையாட்டில் சோபிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு சிலர்,

அப்போது ஒரு கணவன், மனைவி கைகோர்த்துக் கொண்டு நடைப் பயிற்சி  செய்து
கொண்டிருந்தனர். அந்த மனைவி கருவுற்றிருந்தாள்.முதல் முறை ஈன்றெடுக்கிறாள்
என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவர்கள் இருவரும் ஏதோ காதில் சொல்லி
சிரித்துக் கொண்டனர். முதல் முறை ஒரு பெண் கருவுற்றபோது உள்ள பூரிப்பு
அவளிடம் தெரிந்ததை விட அந்த கணவனிடம் தான் தெரிந்தது.

அந்த பெண் பச்சை புடவை அணிந்திருந்தாள். கணவன் வயலெட் நிறத்தில் டீ சர்ட்
அணிந்திருந்தான். அந்த பெண் மாங்கலயமும், ஒரு சங்கிலியும் அணிந்திருந்தாள்.
இவர்கள் இருவரும் ஒருவரது ஒருவர் கைபிடித்து நடந்து சென்று கொண்டிருந்தனர்,
பார்க்கவே மிக மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால்
ஒரு வேலை இது போல் ஒரு பெண் கருவுற்றிருந்து ஆனால் கழுத்தில் மாங்கல்யம்
இல்லை அதாவது திருமணம் ஆகாது நிலையில் , சமூகம் என்னும் நாம் இவர்களுக்கு
தரும் பெயர் என்ன?
அப்படியொரு பெண்ணிருந்தால் தன் பெயர் கலங்கப்படாமல் காத்துக் கொள்ள
அந்த சிறு உயிரை உருவாக்கியவரை ஊருக்கு சொல்லியிருப்பாள்
அல்லது இவ்வளவு மோசமான உலகத்தில் தன் குழந்தை வாழ வேண்டாம் என்று
தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு எப்பொழுதோ அந்த சின்ன உயிரை
கொன்றிருப்பாள்.

இவற்றிக்கெல்லாம் மேல் அந்த பெண்ணை எல்லா அவமானங்களை தாங்கிக் கொண்டு
அந்த குழந்தையை பெற்றெடுக்க உந்து சக்தியாக இருப்பது எது.?

என் எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது...
    

உணர்வு ரீதியாக சிந்திக்கையில் அது வரை அர்த்தமின்றி இருண்டு இருந்த
வாழ்க்கைக்கு இந்த பிஞ்சு குழந்தை பின்னாளில் வளர்ந்து தன்
அர்த்தமாக இருப்பானோ என்று அவள் நம்பிக்கையான எதிர்காலத்திற்காக
காத்திருக்கலாம்.
அறிவியல் பூர்வமாக பார்த்தால் ஒரு பெண் தாயாக இருக்கும் போது தான் புத்திசாலி
இருக்கிறாள் அவள் கன்னியாக இருக்கும் போது ஒப்பிடுகையில். இது திருமணமோ
அல்லது உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயமல்ல, ஒரு ஈன்றெடுக்கும் வேலை நடக்கும்
உடற்கூறியல் மாற்றங்கள்...ஹார்மோன்ஸ்..
எப்படி சிந்தித்தாலும் ஒரு உயிரை இங்கே கொண்டு வருவது என்ற காரியந்தான்
பரிணாம வளர்ச்சியின் முதல் படி.

இப்படி ஒரு எவ்வளவு மனத்தைரியம் கொண்டு இருந்தாலும் சமூகம் முடிந்தவரை
அவளையும் அந்த குழந்தையும் முடிந்தவரை சுட்டு பார்த்துவிடுகிறது.
என்னை கேட்டால் இந்த நிலைக்கு எந்த பெண்ணையும் நாம் தள்ளாமல் இருந்தால்
அதுவே போதும் என்பேன்.