Sunday, February 14, 2010

நெறியாள்கை - II

ஆவணப் படங்களின் போக்கு இவ்வாறாக செல்ல, வீதியில் மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருகூத்து என்று நம்முடைய வயல்

வரப்புகளில் வாழ்க்கை நடத்தும் நம்மவர்களின் கலைகள், இன்னும் சொல்ல போனால் நம்முடைய மண்ணின் கலைகள் என்று

இதைத் தான் சொல்ல முடியும் என்பது என் கருத்து.

இது போல் அன்று நான் பார்த்த வீதி நாடகம் என்பது HIV பற்றிய விழிப்புண்ர்வு பிரச்சாரம் என்று நின்று கவனித்து வந்தேன்.

" அந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள் ? அதாவது அவர்களது வாழ்க்கைக்கு தேவையான் பொருளாதாரப் பிரச்சனைகளை எப்படி தீர்த்து

கொள்ள முடிகிறது ? " என்றெல்லாம் எனக்குள் கேள்வி எழுந்தது.

அதன் பின் ஒரு நாள், பிரபல வானொலி நிலையமும், ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவன்மும் சேர்ந்து HIV பாதிக்கப்பட்டோருக்காக

புதிதாக ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதை தொடர்ந்து நடிகர் கமலஹாசன்

இந்த திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் பேட்டி எடுத்தார்.

இந்த பேட்டியின் போது விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வோரையும் அவர் பேட்டி எடுத்தார்.

அந்த பேட்டியினை முழுவதுமாக கேட்க முடியவில்லை.

HIV தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோர், அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதாகவும், இவர்களின்

வருமானம் குறைவு.

அழிந்து வரும் கலைகளை ஒரு வகையில் சமுதாயத்தில் இன்னும் தக்கவைக்கவும், நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம்

போய் சேரவும் இவர்கள் செய்யும் வேலை [ வேலை என்கிற பேரில் இவர்கள் செய்யும் சேவை ] இவர்களை இன்னும் அழகாகவும்,

உயரமாகவும் காட்டுகிறது.

ஆவணப் படங்களை நெறியாளும் இயக்குனர்களை குறை சொல்லவும், வீதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் கலைஞர்களை

புகழ வேண்டும் என்பது நோக்கமல்ல.

ஏனென்றால் இங்கே ஒருவர் ஹீரோவாக வேண்டும் என்றால் உடனே அவர்களே Minority என்று ஒரு மக்களை Generalise செய்து

அவர்களுக்கு துணையாக இருப்பது போல் காண்பிதது கொள்வார். தயவு செய்து அந்த கூட்டத்தோடு என்னை சேர்த்து விடாதீர்கள்.

நாத்திகமும், பார்பணிய எதிர்ப்பு ஒரு fantasy ஆகிவிட்டது நம்மில் பலருக்கு. இதனை சொல்லவதனால் என்னை பார்பணன் என்றோ,

ஆத்திகன் என்றோ Generalise செய்யவேண்டாம். அந்த மாதிரி இதுவும் ஒண்ணு நினைச்சிடாதிங்க. நம்முடைய கருத்துகளை பிறரிடம்

திணிக்க ஆரம்பிக்கும்பொது தான் பிரச்சனையே.


நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒலி ஏற்படுத்தி மக்களை கூட செய்து, மக்களையே என்ன ? எதற்கு விசாரிக்க வைத்துவிடுகிறார்கள்.

ஆவணப்பட இயக்குனர்களும் சரி, வீதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் கலைஞர்களும் சரி இருவருமே ஒன்றுதான் என்னை
  

பொறுத்தவரை ஆனால் ஆவணப் பட இயக்குனர்கள் தங்களுடைய கதைக் களம் பற்றி எவ்வள்வோ யொசிக்கிறார்கள்., ஆனால்

அந்த படம் எந்த மக்களுக்காக எடுக்கப்பட்டதோ, மக்களைப் பற்றி எடுக்கப்பட்டதோ, அதனை அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பும்,

ரசனையையும் ஏற்படுத்த தவறிவிட்டார்களோ என்ற அய்யத்தின் விளைவு தான் இந்த என் ஆதங்கம்.

நான் இந்த இரு இடுகைகளை எழுதும் இந்த நேரத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கும், ஆவணப் பட இயக்குன்ர்களுக்கும்

என் அன்பையும் , நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்...