Tuesday, February 9, 2010

நெறியாள்கை - I

ஏதோ வாங்க மிதிவண்டியில் அங்காடித்தெருவுக்குச் சென்று கொண்டு இருந்தேன். போகிற
போது பாதையில் இரண்டு ஆண்கள் மேளம் கொட்ட, பெண்கள் ஆடிக்கொண்டிருந்தனர். அந்த பெண்கள் கைகளில் பல வண்ண துணிகைளை கட்டியிருந்தனர். எதற்காக இப்படி ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விசாரிச்சப்ப அவர்கள் எயிட்ஸ் விழிப்புணர்வு
மக்களுக்கு வரனும்னு மக்களோட கவனத்த ஈர்க்கரதுக்காகவும் இப்படி செய்கிறதா கேள்விப்பட்டேன்.

HIV பத்தி உங்களுக்கு சொல்ல வேண்டியதே இல்ல .அத பத்தி போதும் போதும்ன்ற அளவுக்கு உங்களுக்கு ஊடகங்கள் சொல்லியிருக்கும். விளம்பரங்கள் நிறையவே வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் இதனை சாதரண மக்களுக்கு இந்த விழிப்புணர்வை கொண்டு சென்றதில் வெறும் தொலைக்காட்சி மட்டும் பங்கு வகிக்கவில்லை. இப்ப தான "இலவச வண்ணத் தொலைக்காட்சி ".
( அதுலயும் நிறைய பேர்க்கு வரலன்னு,இன்னும் நிறைய பேர் அதையும் வித்துடறதாவும் பத்திரிக்கைகள் எழுதுறாங்க )

இதற்கு முன்னாடி மக்களுக்கு HIV,பெண் கல்வி, மேம்பாட்டு திட்டம், போன்ற பல திட்டங்கள கொண்டு போய் யார் சேர்த்திருப்பான்னு யொசிச்சிட்டுருந்தேன். இவர்களைப் போல் வீதி நாடகம் நடத்தற கொண்டு சேர்த்துருப்பாங்களோ ? என்ற கேள்வியுடன்

மிதிவண்டியை அலுத்தினேன்.

நான் அவர்கள் செய்த விழிப்புணர்வு பிரச்சாரம் என்ன பலன் தந்துவிடும் என்று யோசித்தவாறே மிதிவண்டியை மிதித்து கொண்டே யோசித்து என் எண்ணங்கள் பயணித்தது. இந்த ஆட்டமும் பாட்டமும் எந்த விழிப்புணர்வை தந்தற போகுதுன்னு யொசிச்சேன்.

விழிப்புணர்வை ஏற்படுத்த வந்தவர்கள் பல்கலை அறிஞர் என்றும் சொல்லிகொள்ளவில்லை, ஆடியவர்கள் ஆட கற்று கொண்டவர்களும் இல்லை.
இவர்கள் பணம் வாங்காமல் இல்லை . வாங்குகிறார்கள் , அந்த சம்பளம் மிகவும் குறைவு அவர்கள் செய்யும் வேலையை
ஒப்பிட்டால்.

இருக்கலாம் இவர்கள் ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு புறம் ஆவணப் படங்களை நெறியாளுதலையே தங்களது வேலையாக கொண்டு இருக்கிறார்கள் இன்னும் சில பேர். மற்ற நாடுகளில் எப்படி என்று எனக்கு தெரியவில்லை. நம் நாட்டை பொருத்தவரை

"ஆவணப் படங்கள், பொழுது போக்கு படங்கள் போல் என்று வெள்ளித்திரைக்கு வரும் ?" என்பது பெரிய கேள்வியாகவே இருக்கிறது.நம்ம மக்கள் இந்த படங்களை பார்க்கரதுக்கான வாய்ப்பையும், இதில் இருக்கும் சுவையையும் புசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்ததவறிட்டோம்.

( படம் போடுறதுக்கு முன்னாடி போடுவாங்கல்ல ( News reel ) ஒரு ஆவணப் படம் அத இதையும் குழப்பிக்காதிங்க)

"அட இந்த படம்லாம் நம்ம ஊர்ல பாக்க மாட்டாங்க சார் " அப்படின்னு சொன்னிங்கன்னா, இந்த ஆவண படங்களே எடுக்க தேவையேயில்லையே என்று யொசித்து கொண்டே பொருட்களை வாங்கினேன்.

வாங்கியவுடன் வந்த பாதையில் திரும்பினேன். மறுபடியும் எண்ணங்கள் பாய்ந்தது....அதே கருத்தை நோக்கி....

போன வருடம் சிறந்த ஆவணப் படத்திற்க்கான ஆஸ்கர் விருது நம்ம ஊருபத்தின படம் Smile Pinki க்கு கிடைச்சுது.படம் எடுத்தது வெளி நாட்டுக்காரங்க பெயர் Megan Mylan
வாய் பிழந்த குழந்தைகள் பற்றிய ஆவண்ம் படம். அப்போ இந்த மாதிரி விருதுக்கு தான் இந்த படங்கள் எடுக்கப்படுகின்றனவா?

மக்களுக்கு நல்ல செய்திகளை, நல்ல சிந்தனையுடனும், நல்ல தொழில்நுட்பத்துடனும் கொண்டு செல்கிற படங்களை அங்கீகரிக்க தான் விருதுகளே தவிர , விருதுகளுக்காக மட்டுமே படம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

வெகுஜனமக்களை இந்த படைப்புகள் சென்று அடைய வேண்டும். மக்களிடம் போய் சேராத படைப்பு , கடலில் பேய்கின்ற மழை போல.அது பூமியில் விழுந்தால்தான் யாவர்க்கும் நலம்.

சமுதாய முன்னேற்றத்தின் பால் இது போல் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளிக்கு நடுவே சில சமுதாயத்தில் பேர்க்காக மட்டும் இந்த வேலைகளில் முனைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் தங்களோட profile வண்ணமயமாகத் தெரிவதற்கு
இந்த படங்கள் எடுத்து தங்களுக்குள்ளே புகழ்ந்து கொள்கிறார்கள்.

இந்த ஆவணப் படங்களால் ஏற்படப்போகும் மாற்றங்கள் எத்தனையோ இருக்கிறது.

நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது இதுலாம் ஒரு விடயமா அப்படின்னு கேட்கலாம்?

இந்த தொடர்பு மூலமாக நாட்டுல எந்த பிரச்சனையும் தீத்தரலாம். Kim Phuc Phan Thai என்ற 9 வயது சிறுமி தன் உயிரை நெருப்பிடம் இருந்து காப்பாற்றி கொள்ள நிர்வாணமாக வியட்நாம் போரின் போது ஓடினாள். அந்த போரின் கோரத்தை உலகிற்கு
ஒரு புகைப்படைமாக அந்த பெண் ஒடியதை எடுத்து வெளியிட்டார் Nick Ut.

இந்த புகைப்படம் பின்னாளில் அந்த போரை நிறுத்த காரணமாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறினார்கள்.



ஒரு புகைப்படம் இவ்வளவு சாதித்திரிக்கிறது என்றால் ஆவணப் படங்களால் நாட்டிலில் உள்ள அத்தனை பிரச்சனைகளோடும்

போராட முடியும் என்று நினைத்து கொண்டிருக்கையில் கடந்து வந்த பாதையில் அந்த வீதியில் அதே விழிப்புணர்வு கூட்டம்

இன்னும் நடந்து கொண்டு இருந்தது.

இவர்களது செயல் சமுதாயத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்துகிறதா ? என்றால் அதனை நான் சிந்திக்காமலே விட்டுவிட்டேன்.

அடுத்த இடுகையில் ......

4 கருத்துக்கள்:

Pradeep said...

Good one mani!!1

எவனோ ஒருவன் said...

//Pradeep
அவர்களுக்கு
மீண்டும் என்னோடு கருத்தொத்து நின்றதற்கு மகிழ்ச்சி

சாமக்கோடங்கி said...

அருமை.. உண்மைதான்... இந்த உலகத்தைப் புரட்டிப் போடும் சக்தி நம்மிடமும் இருக்கலாம்.. யார் கண்டது..

நாம் காண வேண்டும்..

நல்ல எழுத்து நடை..

நான் லேட்..

நன்றி..

Ramamoorthy S said...

Hi, Its very useful for us today...
keep on this documentary writing....